Wednesday, July 20, 2011

ஸ்கிரிப்ளிங்..??

என் கோபங்கள் எல்லாம்
சாது மிரண்டால் ரகம்...
அவனா இவன்
என்று ஆச்சர்யப்பட
வைப்பவை..
புது ரத்தம் ஊறிய
மெருகில் சோபை
தட்டி விடும் எனக்கு..
மேற்கொண்டும் இதே
கோபங்களை என்
எதார்த்த தன்மையாக
மாற்றி அமைக்கலாமே  என்கிற
சபலம் துளிர்க்கும்...
ஆனால் இயல்பான
தன்மை அந்த
சபலத்தை வேரறுக்கும்...

ரௌத்ரமும் காமம்
போல தான்...
காமம்
ரகசியமாக
வீரியம் காண்பிக்கும்..
ரௌதரம்
பகிரங்கமான
வீரியங்காட்டும்...

அதனதன்
தன்மையில் இரண்டுமே
வடிகால் தேடுபவை..
அவைகளின்
தேடல் முடிந்த
பிறகான
அமைதியும் ஆனந்தமும்
அலாதியானவை..

என்னவோ சொல்ல
ஆரம்பித்து எதிலோ
முடிக்கிற எனது
கவிதைகள் அநேகமுண்டு..
இதுவும் அவைகளில் அடக்கம்..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...