என் கோபங்கள் எல்லாம்
சாது மிரண்டால் ரகம்...
அவனா இவன்
என்று ஆச்சர்யப்பட
வைப்பவை..
புது ரத்தம் ஊறிய
மெருகில் சோபை
தட்டி விடும் எனக்கு..
மேற்கொண்டும் இதே
கோபங்களை என்
எதார்த்த தன்மையாக
மாற்றி அமைக்கலாமே என்கிற
சபலம் துளிர்க்கும்...
ஆனால் இயல்பான
தன்மை அந்த
சபலத்தை வேரறுக்கும்...
ரௌத்ரமும் காமம்
போல தான்...
காமம்
ரகசியமாக
வீரியம் காண்பிக்கும்..
ரௌதரம்
பகிரங்கமான
வீரியங்காட்டும்...
அதனதன்
தன்மையில் இரண்டுமே
வடிகால் தேடுபவை..
அவைகளின்
தேடல் முடிந்த
பிறகான
அமைதியும் ஆனந்தமும்
அலாதியானவை..
என்னவோ சொல்ல
ஆரம்பித்து எதிலோ
முடிக்கிற எனது
கவிதைகள் அநேகமுண்டு..
இதுவும் அவைகளில் அடக்கம்..!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment