Friday, January 21, 2011

நிகழ்.....

இறந்த மற்றும்
எதிர் காலங்கள் 
குறித்தான 
பிரக்ஞைகளிலேயே
அநேகம் பேர்களுடைய                         
வாழ்நாட்கள் கழிந்துவிட
நிகழ்கால ஸ்மரணை
சற்றும் அற்றுத்தான் 
வாழ்ந்து வருகிறோம்...

மெய்ஞானிகளும் 
பொய்ஞானிகளுமே கூட
நிகழ்காலத்தில் வாழ்ந்து
பழகச்சொல்கிறார்கள்...
வாழ்வின் மொத்த சாராம்சங்களும்
நிகழ்காலத்திலேயே 
புதைந்துள்ளதாகவும் 
இறந்த மற்றும் எதிர் காலங்கள்
யாவும் மலையளவு மாயை
என்கின்றனர்....

இதனை எல்லாரும் 
பன்முறை கேட்டாயிற்று...
மேற்கொண்டும் எவரேனும்
சொல்கையில் கேட்பதற்கு
சுகமாகவும் கடைபிடிக்க
சுலபமாகவும் தோன்றும்...
அதற்காக 
நேற்றைக்கு டீச்சர் 
கொடுத்த ஹோம் வொர்க்கை
மறக்க முடியுமா...
செய்யாமல் போனால் நாளைக்கு
அடிவாங்குவதை நினைத்து
பயக்காமல் தான் இருக்க முடியுமா?...



.

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...