தாயின் மார்புகள்
அறிமுகமே ஆகாத
தத்துக்குழந்தை....
புட்டிப்பாலில்
லயித்தபடி குளித்து
வரும் வளர்ப்புத்தாயின்
ஈர மார்பகங்களை
விநோதமாக தரிசிக்கிறது..
வாயினின்று புட்டியை
அகற்றி வாய் பிளந்து
கவனிக்கிறது....
அதன் கவனிப்பை
அந்தத்தாய் ரசித்தாலும்
அது இழந்திருக்கிற
அந்த மெல்லிய சொர்க்கம்
குறித்து அவளுக்குக் கவலைதான்....
கைகளால் தடவிப்பார்க்க
குழந்தை அவளது
மார்பகங்களைக்கேட்கிறது...
--கொடுக்கிறாள்...
காம்புகளை நெரிக்கிறது..,
ஆனந்தமா வேதனையா
என்று புரியாத கண்ணீர்
கண்களில் கசிகிறது...
மறுபடி புட்டியை எடுத்து
அதன் வாயில் திணித்தவண்ணம்
ரவிக்கையை மாட்டத்துவங்குகிறாள்...!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Saturday, January 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment