Saturday, December 19, 2009

பணவெறி..

ஆரம்பத்தில் கம்பியுட்டர் மூலமாக நிறைய சம்பாதிக்க முடியும் என்பது போல பற்பலரும் சொல்லக்கேட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்து, பிற்பாடு .. தொண்ணூறு சதவிகிதம் டுபாக்கூர் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கு சொந்தமாக ஒரு கணினி தேவைப்படுகிறது.
கணினி குறித்து எந்த அறிவுமே அற்றவர்கள் , இப்படி எல்லாம் வதந்திகளை கிளப்பி, என் போன்ற சில ஜென்மங்களை எப்பாடு பட்டாவது கம்பியூட்டரை வாங்க வைத்து விடுகிறார்கள்..

அப்படி எல்லாம் நெகிழ்வாக சம்பாதிக்கிற சாத்யக்கூறுகள் இல்லை என்பதை அந்த வதந்தி பரப்பிய நபர்களிடம் சொன்னால், "ஓஹோ.. அப்படியா சேதி... நல்ல வேலை .. நாங்க வாங்கலை." என்று வேறு தப்பித்த தன்மையில் புத்திசாலித்தனமாக உரையாடுகிறார்கள்.

அதன் உபயோகம் வேறு விதத்தில் கண்டிப்பாக இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் சொல்வது போல குறுக்கு வழிகளில் பணம் பண்ண முடியும் என்பதெல்லாம் எந்நாளும் நடவாது..
உதாரணத்திற்கு என்னென்னவோ BUX பெயர்கள் எல்லாம் சொல்லி பேபால் , அலெர்ட் பே என்றெல்லாம் கருத்து சொல்கிறார்கள். உள்ளே நுழைந்து விளம்பரங்களை கிளிக் செய்தால் டாலர் பிய்த்துக்கொட்டும் என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்..
விரல்கள் வலி எடுப்பது தான் மிச்சம்..
எந்த நாயும் எதுவும் தராது..
ஆகவே அவைகளை எல்லாம் விடுத்து எதாவது tally, coral drawing , என்பதெல்லாம் கற்று நம் சுய உழைப்பில் வேண்டுமானால் சம்பாதிக்கலாம். அது தான் ஆத்மதிருப்தியும் கூட...
அப்படி நம் குருட்டு அதிர்ஷ்டம் க்ளிக் செய்து காசு வந்தாலுமே அது மானம் கெட்ட காசு தான்.

ஆனால் மக்கள், நாய் விற்ற காசு குரைக்குமா என்கிற அறிவுப்பூர்வ கேள்விகளை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்.

நானுமே கூட பங்குச்சந்தையில் சம்பாதிக்கலாம் என்கிற பேராசையில் ஆன்லைனில் சில பங்குகளை விற்றும் வாங்கியும் intraday செய்கிறேன். அம்பதை வைத்துக்கொண்டு நூற்றைம்பது சம்பாதிக்கிற பேராசையில், இருக்கிற அம்பதையும் இருபத்தைந்தாக்கி , அதுவும் அம்பேல் ஆக இருக்கிறது.. இப்படி தன்மானம் அற்ற வகையில் சம்பாதிப்பது அறிவுப்பூர்வமானவர்களுக்கும் பகுத்தறிவாளிகளுக்குமே கூட சுவாரஸ்யப்பட்டுவிடுகிற விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இன்னும் என் போன்ற முட்டாள்களுக்கு சொல்லவும் வேண்டுமோ?

2 comments:

  1. Excellent. I think most of us would have gone thru these things even though we know there is no easy way for money making. Thanks for sharing.

    ReplyDelete
  2. thanks dear thalapathy for your comment. very thanks.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...