Thursday, December 31, 2015

கள்ளச் சோகம் .........

ள்ளக் கணவனோடு 
படுக்கையில் 
சல்லாபித்துக் 
கொண்டிருந்த ஒரு 
காலை 11 மணி 
சமயத்தில் ...
-சாலையில்  
ஆம்புலன்ஸ் 
கடந்த சைரன் 
சற்றே துணுக்குற 
வைத்தன இருவரையும்.. !

'நகரெங்கிலும் 
இந்த ஈன முணகல் 
தொடர்கதையாகி விட்டது'
என்று சொல்கிறவனை 
'ஆமாம்' என்று 
ஆமோதிக்கிறாள் அவள்.. 

காலை புறப்பட்டு 
அலுவல் சென்ற 
கணவன் அடிபட்ட 
செய்தி அவள் 
காது சேர, 
குறைந்த பட்சம் 
இன்னும் பத்து 
அல்லது 
பதினைந்து 
நிமிடங்களாவது 
பிடிக்கக் கூடும்.. !!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...