Friday, January 2, 2015

அசாத்யப் பிரியன்..

முத்தெடுக்க 
நெருப்பில் மூழ்கி 
தீக் கங்கெடுக்க 
கடலுள் மூழ்குகிறேன்.. 

ஆம்புலன்ஸ் ஏறி 
ரஜினி படம் முதல் ஷோ 
போகிறேன்.. 
மாரடைப்பு வந்ததற்கு 
மாட்டுவண்டி ஏறி 
ஆசுபத்திரி போகிறேன்.. 

பம்பர் குலுக்கலில்  
பரிசு கிடைத்தும் 
தற்கொலைக்கு 
திட்டம் போடுகிறேன்.. 

பாதாளத்துள் 
புதையுண்டு போய் 
பிராணவாயு தேடுகிறேன்.. 

--இதையெல்லாம் விட 
பெண்ணே.. 
உமது காதலை எதிர்பார்த்து 
கவிதை புனைகிறேன்..!!

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...