Sunday, January 25, 2015

ஐ ................விமரிசனம் [..ச் சை .. ]

ன்னைக்குத் தான் "ஐ" பார்த்தேன்..
ஊடகங்களின் பத்திரிகைகளின் எதிர்படுகிற ரசிகர்களின் ... இவர்கள் அனைவரின் கருத்துக்களையும் அப்படி ஒன்றும் பெரிதாக கிரகிக்காமல் தான் சென்றேன்..   

ஷங்கர் இவ்ளோ கான்ஃபிடண்ட் டுடன் இருப்பது சற்று எரிச்சலாக உள்ளது.. இத்தனை குரூர கற்பனை எதற்காக?.. ஹீரோ ஒரு அவஸ்தையை அனுபவிக்கிறான் என்றால், வில்லனாக வலம் வருகிறவர்களும் அதே வித பேரவஸ்தையை அனுபவிக்கிறார்கள்..

சண்டைக்  காட்சிகளும், காமெரா கோணங்களும் என்னதான் அசத்தினாலும், யதார்த்தம் என்பது எங்கு தேடியும் கிடைக்காத செயற்கையோடு படம் நெடுக.. 

ஆசையோடு குழந்தைகளைக் கூட்டி சென்றாலோ, அந்தக் குரூர விக்ரம் கண்டு அருவருத்து பயந்து போவார்கள்.. பொண்டு புள்ளைக படுகிற சிரமத்தைப் பார்க்கையில், இந்த இழவுக்கு நாம தனியா வந்து போயிருக்கலாம் என்று அனேக புருஷர்களுக்குத் தோன்றும்.. இந்த தீர்க்க தரிசனம் எனக்கு இருந்ததால, நல்ல வேல .. தனியா வந்து மத்த கப்புல்ஸ் படற லோலை படத்தோட சேர்த்து வேடிக்கையா பார்த்தேன். ஹிஹி.. 

காக்கிசட்டையில் அம்பிகாவோடு  கமல் பாடுகிற பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள, வானிலே தேனிலா, போன்ற ஆனந்தமான டூயட்களை பார்த்தும் கேட்டும்  பரவசப் பட்ட நாம், அந்த மாதிரியான அலாதி உணர்வுகளுக்கான சந்தர்ப்பங்களுக்கும் தடா போட்டு ஒரே இரைச்சல்களும் அனத்தல்களும் கலவையான  காட்டுக் கத்தல்களோடு பாடல்கள்.. அவைகளை "பாடல்கள்" என்று அடயாளப் படுத்தவே  வெட்கமும் வேதனையும் பிடுங்குகின்றன.. !!

கஃபே டே போய் , கப்பக்ஸினோ , எஸ்ப்ரெஸ்ஸோ வகையறா காப்பிகளை பருகக் கொடுக்கிற ஷங்கர், சென்னை சேரியில் அருக்காணி வீடு சென்று வரக்காப்பியும் பரிமாறி இருக்கிறார்.. அதனதன் தன்மையில் எல்லாமே ரசிக்கவும்  ருசிக்கவும் லாயக்கு என்ற போதிலும், எதற்காக காப்பிகள் இந்த முறை  சேற்றுத் தண்ணீர் கலந்து கொடுக்கப் பட்டன என்று அசூயை ததும்பக் கேட்கத் தோன்றுகிறது.. 

என்னதான் கற்பனை என்ற போதிலும் உடல்கள் எங்கிலும் பபுள்கம் போன்று புடைத்துக் காணப்படுகிற  கொப்புளங்கள் தாங்கொணா எரிச்சலை வியாபிக்க செய்கிறது.. அந்த அழகான சினிமா திரையே இற்றுவிட்டது போன்ற மாயையை  ஏற்படுத்திவிட்டது.. 

காட்சி அமைப்புகள் மனசுக்குள் எவ்விதப் பரிதாப உணர்வுகளையும் கொண்டு வரவில்லை.. விக்ரம் நடிப்பை டெடிகேஷன் என்று வியப்பதா, இப்படி எல்லாம் நாறிப்  போய் தான் டெடிகேட் பண்ண வேண்டுமா என்றெல்லாம் கோபம் வருகிறது.. மேக்-அப் என்பதால் எவ்வித அருவருப்பும் அற்று நாயகி அவனை அரவணைப்பதும் அந்தக் கொடுமையோடு டூயட் பாடுவதும்.. கருமம்டா சாமி.. 

அட்டூழியம் செய்கிறவர்கள்  அழிந்து விடாமல், சொச்ச காலங்களை சொத்தையாக  வாழ்ந்து சாக வேண்டுமென்கிற இந்த உலகமகா கன்செப்ட் , உயர் ரக  சினிமாக்களை சிருஷ்டிக்க சுலபத்தில் சாத்தியப் படுகிற ஒரு கலைஞனுக்கு உதித்திருப்பது நமக்கெல்லாம் நிகழ்ந்திருக்கிற கொடுமை.. 

ஒரு மூன்றாம் பாலின  நபரை வைத்து செய்கிற நய்யாண்டி எந்த விதத்தில் ரசிக்க முடிகிறது?.. 

தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மைல் கல்..  இது வித்தியாச முயற்சி, விருதுகள் விக்ரமுக்கு நிச்சயம்.. . ஷங்கரின் மகத்தான காவியம், என்பவை போன்ற ஊடகங்களின்  விமரிசனங்களும், ஜால்ராக்களும் வந்திருக்குமோ என்னவோ எனக்குத் தெரியவில்லை.. 

இண்டெர்வலில் பசிக்கு ஒரு பஃப்சை , ஒரு கூல் ட்ரின்கை நிம்மதியாகக் குடிக்க முடியவில்லை.. பப்ஸை கடிக்கையில், விக்ரமின் மண்டைக் கொப்புளத்தைக்  கடித்தது போன்றும், கோக்கை வாய்க்குள் ஊற்றிய போது , அந்தக்  கொப்புளத்தின் சீழை அருந்துவது போன்றும் குமட்டத் தோன்றியது.. 

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...