Thursday, January 22, 2015

பேரம்............

"நீங்க எவ்ளோ நேரம் பேரம் பேசினாலும் ஒரே விலை தான் சார்.. சும்மா இப்டியே சொன்னதையே திரும்ப சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க சார்.. மத்த கஸ்டமருக்கு வழி விடுங்க.. நீங்களே கவனிங்க, உங்களோட ரேட்டுக்கு ஒரு பய கேக்க மாட்டான்.. ஏன்னா எல்லாருக்கும் வியாபாரியோட கஷ்ட நஷ்டம் புரியும். உங்க மாதிரி சில பேருங்க தான் சுயனலமாவே சிந்திக்கிற ஆளுங்க"

அதிகப்ரசங்கம் போன்று கடைக்காரன் என்னிடம் தாறுமாறாகப் பேசிக் கொண்டே டென்ஷன் ஏற்றினான்.. 

நாலாயிரம் விலை சொன்ன மொபைலை நான் மூணு நானூறுக்கு கேட்க ஆரம்பித்து மூணு எண்ணூறு வரைக்கும் வந்து நிறுத்தியும் கூட பேரம் படியாமல் விரட்டி அடிக்கப் பட்டேன்.. 
அடுத்த மாதமே, மூவாயிரத்துக்கும் குறைவாக விலை போகப் போகிறது.. எல்லா எலெக்ட்ரானிக் பொருள்களின் தலை எழுத்து இது.. ஆனபோதிலும், அந்த கரண்ட் ரேட்டில் இருந்து குறைவாய் எதிர்பார்க்கிற எங்களைப் போன்ற "பேர வியாதியஸ்தர்கள்" இருந்து கொண்டே தான் இருக்கிறோம்.. 

அது மூவாயிரம் வரும் போதுமே கூட வாங்கி இருக்கமாட்டோம்.. 
அப்போது, எங்களின் பேரம் ரெண்டு ஐந்நூறு என்று துவங்கி ரெண்டு எண்நூற்றம்பது  என்று அடைபட்டு நிற்கும்.. 

எத்தனையோ பொருள்கள் எத்தனையோ  கடைகளில், நாம் நின்று வாங்க யோசித்துக் கொண்டிருக்கிற போது சர்வ சாதாரணமாக எவ்வித பேரங்களையும்  பேசாமல்   கடைக்காரன் சொன்ன விலைக்கு வாங்கிச் செல்கிற வள்ளல்களைப் பார்க்க நேர்கிறது.. ஐம்பது ரூபாய்க்குக் கேட்டிருந்தால் கூட குதித்துக்  கொண்டு கொடுத்திருப்பான் க.காரன் .. ஆனால், இருநூறு என்று அவன்  சொன்ன டுபாக்கூர் விலையைக் கொடுத்து வாங்கி செல்கிற அதிபுத்திசாலிகள் மீது எப்போதும்  எனக்கொரு தாங்கொணா எரிச்சலும் அங்கலாய்ப்பும் உண்டு.. 

ஏமாற்றுகிற கடைக்காரனை  ஓங்கி அறையத் தோன்றுவதை விட, அந்த வாங்கிப் போகிற  பனாதி மீது தான் அலாதி கடுப்பு தோன்றும்.. 

மற்றொரு பேரத்தில் அந்த செல்லின் விலை படிந்து  என் கைக்கு வந்தது.. 

கடைக்காரனுக்கு  என்று அனுமதிக்கப் பட்ட சிறு லாபத்தை கூட என் போன்ற சிலரின்  தடை உத்தரவால், காண்டாகி சபிக்கிற கடைக்கார்கள், சொன்ன விலை கொடுத்து வாங்கிப்  போகிற இ.வாயன்கள் தான் தெய்வங்களாகப் படுவார்கள். 

என் போன்ற நபர்களுக்கு  அநியாயம் புரிபவர்களையும் ஏமாந்து போகிறவர்களையும் ஓங்கி அறையத்  தோன்றும்.. 
கடைக் காரர்களுக்கோ எங்களைப் போன்ற  பேரம் பேசுபவர்களை ஓங்கி ஓங்கி அறையத் தோன்றும்.. 

அறைகள் மாத்திரம் அனுமதிக்கப் பட்டால், ஆளாளுக்கு கன்னங்கள் வீங்கி காதுகள் டமாரமாகித்  தெருக்கள் எங்கும் திரிய நேரும்.. ஹிஹி.. 

1 comment:

  1. இப்பவும் அப்படித்தான் தோணுகிறது... ஹிஹி...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...