Thursday, December 18, 2014

கி.பி ..[one page story?]

அது பரம்பரைக் கோடீஸ்வரர்கள் பங்களா.. 
அங்கே கொடுத்து வைத்த பயல் ஒருவன்.. நான்கைந்து வருடங்கள் முன்னர் பதின்களைத் தொட்டிருக்கும் பதினாறு வயதுக் காளை .. 
கிருஷ்ணபிரஸாத் என்கிற நாமம்.. 
'மைனர் கி.பி.' என்றால் பங்களாவிலும் பயில்கிற பள்ளியிலும் மகா பிரபலம்.. 
வீட்டைத் துப்புரவு செய்கிற கமலா உடலுக்கு முடியலை என்பதால் தனது ஏழாப்பு படிக்கிற சரண்யாவை அன்று அனுப்பி வைக்கவே.. 
மைனருக்கு மண்டை காய்ந்தது.. !
"ஏன் உங்க அம்மா இன்னைக்கு வரலையா ?" என்று கேட்டான் சரண்யாவிடம் 
வந்ததும் வராததுமாக.. 
"ஒடம்புக்கு சரி இல்லேங்க சின்ன எஜமான் " என்றாள் .. 
"நாளைக்காச்சும் வந்துடுவாங்களா?"
"வருவாங்க எஜமான்"
தன்னுடைய மடிப்புக் கலையாத பைஜாமா , அதிலே தெளிக்கப் பட்ட ஃபாப்ரிக் செண்ட் , தனது உடம்புக்கு அடித்துக் கொண்ட பாடி ஸ்ப்ரே எல்லாம் வீண் என்பது போன்று "இச்' கொட்டி நகர்ந்து கொண்டார் மைனர்.. 

10 ஆண்டுகளுக்குப் பிறகு ..  

அதே கோடீஸ்வர பங்களா.. 
26 வயதாகிற நம்ம "மேஜர் கி.பி." 
அப்போது தான் தனது கல்லூரி நண்பர்களோடு தமது 'ஆடி' காரில் பக்கத்துப் பிக்னிக் ஸ்பாட்டுக்கு சென்று விட்டுத் திரும்பினார்.. 
யாருடனோ சிரித்தவாறு மொபைலில் பேசியவாறே உள்ளே புகுந்த மேஜர், கமலாம்மா தமது அறையை துடைத்துக் கொண்டிருந்தது கண்டு டென்ஷன் ஆகிப் போனார்.. 
"ஏம்மா இன்னைக்கு சரண்யா வரலையா?"
"நாளைக்கு  வந்துடுவாய்யா.. இன்னைக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியலை"
"நாளைக்கு முடியாட்டியும் அனுப்பி வையுங்க.. எங்க ஃபேமிலி டாக்டரை வரவச்சு பார்க்கறோம்"
"சரிங்க  சின்ன எஜமான் . ரொம்ப நன்றிங்க.. "


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...