என் கன்னக் காடுகளில்
உன் முத்தமழை..
என் சேற்றுக் கன்னங்களில்
உன் முத்தத் தாமரைகள்...
என் தேனடைக் கன்னங்களில்
உன் முத்தத் தேனீக்கள்.. !!

மழை பெய்த என்
கன்னக் காடுகளில்
உமது முத்த வெள்ளாமை.. !
பிறகு--
எனது வெள்ளாமைக் கன்னங்களில்
ஊடுபயிராய் உமது முத்தங்கள்..
இன்னும் பிறகு---
பிடுங்கி எறியப் படவேண்டிய
களைகளாக உமது முத்தங்கள்... !!

--மனச் சலிப்பை நிகழ்த்துகிற
சுரப்பிகளை நீக்கியாக வேண்டும்
மனிதனிடத்து...!
அல்லவெனில்-
நாறுவதை மணக்கிறதென்பான்..
மணப்பதை நாறுகிறதென்பான்.. !!
உன் முத்தமழை..
என் சேற்றுக் கன்னங்களில்
உன் முத்தத் தாமரைகள்...
என் தேனடைக் கன்னங்களில்
உன் முத்தத் தேனீக்கள்.. !!
மழை பெய்த என்
கன்னக் காடுகளில்
உமது முத்த வெள்ளாமை.. !
பிறகு--
எனது வெள்ளாமைக் கன்னங்களில்
ஊடுபயிராய் உமது முத்தங்கள்..
இன்னும் பிறகு---
பிடுங்கி எறியப் படவேண்டிய
களைகளாக உமது முத்தங்கள்... !!

--மனச் சலிப்பை நிகழ்த்துகிற
சுரப்பிகளை நீக்கியாக வேண்டும்
மனிதனிடத்து...!
அல்லவெனில்-
நாறுவதை மணக்கிறதென்பான்..
மணப்பதை நாறுகிறதென்பான்.. !!
முடிவில் உண்மை தான்...
ReplyDeletethks boss for watching my blog
ReplyDelete