Tuesday, December 16, 2014

ஒரு விவசாயி எழுதிய காதல் கவிதை..

என் கன்னக் காடுகளில் 
உன் முத்தமழை.. 
என் சேற்றுக் கன்னங்களில் 
உன் முத்தத் தாமரைகள்... 
என் தேனடைக் கன்னங்களில் 
உன் முத்தத் தேனீக்கள்.. !!

மழை பெய்த என் 
கன்னக் காடுகளில் 
உமது முத்த வெள்ளாமை.. !

பிறகு--
எனது வெள்ளாமைக் கன்னங்களில் 
ஊடுபயிராய் உமது முத்தங்கள்.. 

இன்னும் பிறகு---
பிடுங்கி எறியப் படவேண்டிய 
களைகளாக உமது முத்தங்கள்... !!

--மனச் சலிப்பை நிகழ்த்துகிற 
சுரப்பிகளை நீக்கியாக வேண்டும் 
மனிதனிடத்து...!
அல்லவெனில்-
நாறுவதை மணக்கிறதென்பான்.. 
மணப்பதை நாறுகிறதென்பான்.. !!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...