Tuesday, November 19, 2013

என்னாங்கறீங்க??

இந்த சச்சின், ar.ரஹ்மான் விஸ்வநாதன் ஆனந்த், இவிகளை எல்லாம் பாக்கறபோது, நாமெல்லாம் என்னடா பொறப்புன்னு ஒரு வெறுப்பு சும்மா குபீர்னு பீர் மாதிரி பொங்குது..
பிரம்மன் செஞ்ச மெகா நயவஞ்சகம் போல மனசுக்குத் தோன்றது சரியா தப்பா?
மனுஷனுக்கு மனுஷன் தான் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கறதா கேள்விப் பட்டிருக்கேன்.. ஆனா, இந்தப் பொறப்பு சமாச்சாரத்தை யோசிக்கிறப்ப சாமியே அந்தத் தப்பை செஞ்சிட்டுதோன்னு ஒரு உத்தரவாதமில்லாத சந்தேகம் எட்டி எட்டி ஒதைக்குது..

சரி உடுங்கோ.. நாமுளும் கழுதை அதே மாதிரி முயற்சி செஞ்சா சாதிக்கவா முடியாது., அவுங்கள மாதிரியே தானே ரெண்டு கண்ணு காலு கையோட பொறந்திருக்கோம்.. ன்னு எதையாவது கிறுக்குப் பயபுள்ள இருக்கற கொஞ்ச மானமும் காத்துல போற மாதிரி செஞ்சு நாசமாப் போறதுக்கு, நமக்கு வர்ற நாலு விஷயத்தை செஞ்சு காயற வயத்துக்குக் கஞ்சி  ஊத்திக்கிறது உத்தமமடா ராசா..   என்னாங்கறீங்க??

  

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...