Sunday, September 22, 2013

சத்தியம் என்கிற மாயை..

அவ்வப்போதைய
கிஞ்சிற்றுத் தருணங்கள்
இந்த "வாழ்வின் சாஸ்வதமின்மை"யை
சிற்சில சம்பவங்கள்
உணர்த்த நேர்ந்தாலும்...
-பெரும்பாலான
தருணங்கள்
"மாயைகள் குறித்த"
எவ்வித பிரக்ஞைகளுமே
எவர்க்கும் எழுவது
போன்ற சுவடுகளே
தென்படவில்லை..!!

ஆயுட்காலத்தை
புதுப்பித்துக் கொள்வதற்கான
புதிய முறை 
அறிமுகமாகி விட்டது
போல...
இந்த வாழ்வு குறித்து 
அதீத நம்பிக்கைகளையும் 
தீர்மானங்களையும் 
சேகரிக்கத் துணிகிறார்கள்..!

இத்தனை ஆழங்களை 
சுலபமாக சிந்திக்கிற 
ஆற்றல் உள்ளவர்களே கூட.. 
பின்னாடி வந்தவன் 
தனது பைக்கை 
சன்னமாக இடித்து 
விட நேர்கையில் 
பின்பக்கம் முகத்தைத் 
திருப்பி ஓர் 
ரௌத்திரத்தை 
பதிவிறக்கம் செய்து 
வண்டியை ஓரங்கட்டி 
சற்றே விழுந்த 
கீச்சலுக்கு ஆகிற 
செலவுக் காசை 
வசூலிக்கிற புத்தி...
அருவருக்கிற விதமாகப் 
புரிபடுகிறது ஏனோ..!!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...