Saturday, September 21, 2013

நம் எல்லாருடைய அனுபவங்கள்..

நம்முடைய நெடுநாளைய இலட்சியங்கள் என்ற பட்டியலோடு பிறந்த காலம் தொட்டு, நமக்கு அறிவென்ற ஒன்று பிறந்த நாள் தொட்டு நம்மோடு ஊடாடிக் கொண்டிருக்கிற பல இலட்சியங்கள்.. ரெண்டொன்று நிறைவேறியும், சிலவற்றை என்ன திணறியும் சாத்யப் படாத வகையிலும் .. சரி நம்ம தலைல இவ்வளவு தான் எழுதி இருக்கு என்கிற ஓர் சமாதானத்தோடு பலரும் தங்களின் அன்றாட வாழ்வினை அனுசரிக்கையில்...

என்றோ நம்முடன் பழகிய நண்பன் திடீரென்று நம் இல்லம் தேடி வந்து தனது புதிதாகக் கட்டிய வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு அழைக்கிறான்.. தனது திருமணத்துக்கு அழைப்பு விடுக்கிறான்..
நம்மோடு நட்புப் பாராட்டிய காலங்களில் அவன் மிகவும் சராசரியாக அல்லது நம்மை விட மக்காக இருந்திருப்பான்.. இவன் என்னத்தை கல்யாணம் பிரம்மாதமாக நடத்தப் போகிறான்.. இவன் என்ன வீடு கட்டிக் கிழித்திருக்கப் போகிறான் .. என்று நமது மனது எகத்தாளமாக ஓர் அவசர அனுமானத்தை மெளனமாக முன்வைக்கும்..

ஆனால் அவனது அழைப்பினை மதித்து அவனது விஷேசங்களுக்கு செல்ல நேர்ந்தாலோ... அடக் கடவுளே.. நாம் நமது  இன்னும் நிறைவேறாத பட்டியலில் இடம் பெற்றிருக்கிற மகா பிரம்மாண்ட விஷயங்களை அந்தப் பனாதி நண்பன் அனாயாசமாக சாதித்திருப்பான்.. !

'எப்டி ராசா இம்புட்டு முன்னேறினே?'.. 'அப்பெல்லாம் அடிபட்ட தெருநாய் மாதிரி கெடப்பியே! '.. 'நெசம்மாலுமே இதெல்லாம் நீதானாடா ராசா?" என்றெல்லாம் பலவாறாக மனசுள் குவெஸ்ட்டீன்ஸ் பின்னிப் பெடலெடுக்கும் .. ஆனாப் பாருங்க.., ஒன்னும் கேட்க முடியாது.. கம்னு வந்தமா பார்த்தமா வயித்துக்கு வக்கனையா ரெண்டைக் கொட்னமா.. ன்னு நழுவிடறது தான் உத்தமம்..

வீட்டாண்ட வந்ததும் பல கேள்விகள் மனசுக்குள்ள ஓடும்.. " இவன் தான் ஒழச்சு சம்பாதிசிருப்பானா.. அல்லது இவனோட அப்பன் பாட்டன் வச்சிருந்த சொத்துப் பத்தா இருக்குமோ.. ??

எவனோ எக்கேடு கெட்டா என்ன.. ஒழச்சா என்ன.., தின்னுட்டுத் தூங்குனா என்ன.. அப்பன் சொத்தை அனுபவிச்சா என்ன.. அவனே கஷ்டப்பட்டு சம்பாதிச்சா தான் என்ன..

நம்ம பொழப்பு இங்க நாறுது .. இத எதனாச்சும் தெளிவா கழுவி சாய்க்க முடியுமான்னு பார்க்கணுமே ஒழிய  மத்தவுக மவுசப் பார்த்து பொச்சரிப்பா பேசறது நாதாரிக வேல.. !!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...