Friday, July 26, 2013

அலட்டல் ...


.. 

எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் 
அலாதியானது.. 

பார்ப்பவர்க்கு 
நம் அலட்டல் 
புரிபடாததாக 
இருத்தல் நலம்...!

இயல்பாகவே 
அலட்டும் குணமற்றவர்கள்
தெய்வத்திற்கொப்பாவர்... 
இயல்பாகவே  அலட்டுபவர்கள் 
இம்சையாகப் புரிபடுவர்..!

நாசுக்காய் 
அலட்டத் தெரியாதவர்கள் 
நாசமாய்ப் போவர்..!!

அலட்டலை 
ரகஸ்யமாக்கி ..
புறமிருப்பவர்களுக்கு 
யதார்த்தமாகப் 
புரிபடுகையில்----

நிச்சயம் 
எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் மிகமிக 
அலாதியானது..!!

4 comments:

  1. அலட்டிக் கொள்ளாமல் அருமையாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. அலட்டல் இல்லாமல் இருந்தது கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மிக்க நன்றி சுரேஷ்..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...