Sunday, July 14, 2013

சிங்கம் 2

ஒரு ஜனரஞ்சக யாகமே நடத்தி இருக்கிறார்கள்.. அந்தத் தூத்துக்குடி உப்பளப் பிராந்தியாமே அபின் என்கிற வஸ்துவால் நிரம்பி வழிவது போன்ற ஓர் மாயையை நிகழ்த்தி உள்ளார்கள்..
சூரியாவின் அந்த மிடுக்கும் ஆவேசமும் மீசையும் போலீஸ் காஸ்ட்யூமும் .. நிஜப் போலீஸ் கூட அத்தனை தேஜஸில் இருக்கிற வாய்ப்பில்லை என்பதை சொல்லியாக வேண்டும்.. 
ஆனால் .... ஆடியன்ஸை சீட் நுனியில் உட்கார வைக்க வேண்டும் என்று மிகவும் பிரயத்தனித்திருப்பார்கள் போலும்.. 

இத்தனை களேபரங்களுள் நகைச்சுவைகளையும் அலேக்காக கொட்டி இருக்கிறார்கள்.. முதல் பாக விவேக்கையும் இரண்டாம் பாக சந்தானத்தையும் மிகத் திறமையான ட்ராக்கில் கலவை செய்து விநியோகித்தது எல்லாம் ஓகே.. 

அதே விதமாக அனுஷ்காவையும் நுழைத்து வெறுமனே ரெண்டு டூயட் பாட விட்டிருக்கிறார்கள் .. ஹன்சிகா மொட்வாணியை பிளஸ் 2 பெண்ணாக்கி அப்டி ஒன்றும் மனசில் ஒட்டாமல் செய்துள்ளார்கள்.. 

எந்நேரம் பார்த்தாலும் வில்லன்களிநிடத்து மிரட்டல் விடுப்பதும் அவர்களை சிங்கம் போல பாய்ந்து பாய்ந்து சண்டையிட்டு தோற்கடிப்பதுமே சூரியாவின் பிரதான வேலை.. 

ஆந்திராவையும் குறிவைத்து திரைக்கதையையும்  காமெரா ஆங்கில்களையும் --ரொம்பப் பரபரப்பை தூவியுள்ளார்கள்.. 

அஞ்சலி ஆரம்பக் குத்துப் பாட்டு .. வில்லன் கோஷ்டிகளின் அடாவடி திமிர் நியாயங்கள், அதனை சுலபத்தில் தனது சாதுரியத்தில் ஜேம்ஸ் பாண்ட் போல ஓடிவந்து  களைந்து விடுகிற சூரியா.. 

இதையே தான்யா சினிமா தொடங்குன நாளில இருந்து பார்த்துட்டு வர்றோம்.. ஆனா பாருங்க .. சலிக்காம விசில ஊதறாங்க ... 

சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால், ஓர் நியாயமான தரமான புதுமையான, ரசனை ததும்புகிற விஷயங்கள் உண்டா எனில், சத்தியமாக இல்லை.. !!

2 comments:

  1. உண்மை... வெறும் பொழுதுபோக்கு மட்டுமே...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...