Monday, June 3, 2013

சற்று முன்னர்..

மொய்க்கிற ஈக்காக  
சுழிப்பது போல 
தெரிகிற 
பிணத்தின் முகம்...

நாசிப் பஞ்சை 
அகற்றச் சொல்கிற            
கட்டளையின் சாயல் 
அந்த முகத்தில்.. 

ஊதுவத்திப் புகை 
நெஞ்சை அடைப்பதாக 
மௌனமானதோர் 
புகார்.. 

மின்விசிறி சுழலாமல் 
வியர்வைக் கசகசப்பு 
ஓர் சங்கடத்தை 
நிகழ்த்துகிறது...
அகாலத்தில் 
வந்திருக்கிற இந்த 
மாரடைப்பு மரணத்தைத் 
தவிர்த்துவிடுகிற 
சாத்தியங்கள் 
இருக்கும் பட்சத்தில்...
இதற்காகவெல்லாம் 
--நான் மேற்சொன்னதைக் 
காட்டிலும் சற்று 
காட்டமாகவே 
நடந்து கொள்கிற சுபாவமுள்ளவன் 
தான் பழனிசாமி..!!

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...