Wednesday, May 25, 2011

என் அனாமதேய கவிதை ஒன்று....

வண்டு தானே
பூவைக்குடையும்?...
என் நெஞ்சை
பூ இங்கு குடைகிறதே ...
 
சுகமானதே
இந்த முரண்கள்..
புது ஸ்வரமானதே
எந்தன் முணகல்....

புல்நுனி பனித்துளி
காற்றில் சிதறும்
உன் விழிகளின் வீச்சிலோ
பாறை சிதறும்...

ரத்தின சுருக்கமாய்
உன் இடை இருக்கும்
ரொம்பவே பேசிடும்
உன் மார்புகளும்...

வாய் வெடிக்கப்
பேசுபவன் நான்
எப்பொழுதும்...ஆனால்
வார்த்தைகள் வரவில்லையே
உன்னைக்கண்டதும்...

--சினிமா பாட்டெழுதுகிற சிறு முயற்சி... எழுத எழுத என்னவோ வைரமுத்து, வாலி போல ஆகி விட்டதான உணர்ச்சி... இப்படி கிறுக்கிக் கிழித்துப்போட்ட கவிதைகள் ஏராளம் உண்டு... அப்படி கிழித்துப்போட்ட சில ஞாபகங்களை இன்று பிளாகில் ஒட்ட வைத்து சிலிர்த்துக்கொள்வதில் ஓர் அல்ப ஆத்மதிருப்தி..

--இதற்கு மெட்டுப்போடவோ, இட்டுக்கட்டி பாடவோ இளையராஜாவும் ரஹ்மானும் வரப்போவதில்லை என்பது தெரியும்... ஆனபோதிலும் என்ன, படிக்கிற நாமாவது ராகமாக பாடிப்பார்ப்போமா??       

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...