Tuesday, May 24, 2011

மாறி மாறி தோற்றமளிப்பவை..

என் அஜாக்கிரதையான
தன்மை, மிகுந்த எச்சரிக்கை
உணர்ச்சியோடு 
இருப்பதாகத்தோன்றும்....

என் யதார்த்தமான
தன்மை, 
திட்டம் தீட்டி 
செயல்படுவதாகத்
தோன்றும்...
                                                                    
என் வளைந்து கொடுக்கிற
தன்மை, மிகவும்
நான் இறுகிக்கிடபபதாகத்
தோன்றக்கூடும்...

பரமானந்தத்தில்
நான் கதறி கண்ணீர்
சிந்துவது
ஏதோ சோகங்களுக்காக 
அழுவதாகத்தோன்றும்....

இவ்விதம் எனது
எல்லா மன உணர்வுகளையும்
மாற்றி பிரதிபலித்துக்
காண்பிக்கிற என் முகம்,
என்னை பயித்தியக்காரன்
போல தோன்ற வைக்குமோ??

சுந்தரவடிவேலு...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...