Friday, July 31, 2009

கிணற்றுத்தவளை நான்.

நான் ஓர் குளியலறை பாடகன். என் போக்கில் பாடுகையில் தேர்ந்த பாடகனைக்காட்டிலும் கூட சுத்த ஸ்வரங்களுடன் பாடக்கூடிய உணர்வினை நான் பெறுவேன். நான் மட்டுமே பெறுவேன். மற்றபடி அந்த எனது உணர்வு ஓர் கற்பனை, மற்றும் மாயை.
அதே போல என்னை ஜெயகாந்தனை காட்டிலும் அறிவுஜீவியான ஸ்ருஷ்டிகர்த்தா என்கிற நய்யாண்டித்தனமான அகம்பாவத்தில் எதையேனும் என் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருப்பேன். இன்று ப்ளோகில் எழுதுகிற ஓர் சூழல் ஏற்பட்டு விட்டதால் அந்த மாதிரி யான எனது சிறு பிள்ளைத்தன்மைகளை விட்டொழித்து விட விழைகிறேன்.

நன்றி,
சுந்தரவடிவேலு.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...