Saturday, May 30, 2015

நாசமாய் ப் போன விழிப்பு..

னது 
கனவுத் தோழியின் 
சிநேகிதம் 
என் உறக்கங்களை 
இனிய அனுபவங்களாக 
மாற்றும் வல்லன்மை 
கொண்டிருந்தன... 

என்றைக்கும் வராமல் 
என்றேனும் எதிர்பாரா 
தருவாயில் தான் 
வருகிறாள்.. 
கனவுகள் கூட 
நாம் எதிர்பார்ப்பன 
வருவதில்லை.. !!

சரிவர நான் 
உறங்குவதில்லை 
என்கிற புகாரை 
என் மனைவி 
அவளிடம் 
தெரிவித்திருப்பாள் 
போலும்..
'ஏன் நீங்கள் 
தூங்குவதே இல்லையாம்?'
என வினவினாள்..
"உறக்கம்.. பசி.. 
எதுவானாலும் 
அவை வரும்போது 
மாத்திரமே அணுகப் 
பிடிக்கிறது எனக்கு"

இந்த எனது பதில் 
அவளுக்குப் பிடித்திருந்தது.. 

'உங்கள் மொபைல் எண் 
கொடுங்கள்.. நான் 
நேரம் கிடைக்கையில் 
பேசுகிறேன்" என்று 
அவள் கேட்ட மாத்திரத்தில் 
இந்த நாசமாய்ப் போன 
விழிப்பு வந்து 
அவளைத் தொலைக்க 
நேர்ந்தது.. 

அவள் வருகிற 
ஒவ்வொரு எதிர்பாரா 
கனவுகளிலும் 
"கனவில் மட்டுமே 
நீ வந்து செல்கிறாய்.. 
நிஜத்தில் உன்னை 
நான் எங்கே 
தரிசிப்பதாம்?"
என்கிற கேள்வியை...
கேட்க மறப்பதற்கென்றே 
குறித்து வைத்திருக்கிறேன் 
போலும்.. !
கனவில் அவளை 
தரிசித்ததும் அந்தக் 
கேள்வியே மறந்து 
போகிறது.. 
ஆனால் நான் 
தூங்காத புகாரை 
ஒவ்வொரு கனவிலும் 
அவள் சொல்வதற்கு 
மறப்பதில்லை.. 

நிச்சயம் அடுத்த 
கனவுச் சந்திப்பில் 
அவளிடம் சொல்லியாக 
வேண்டும்.. 
"உன் மடியில் 
என்னை சாய்த்துக் கொண்டு 
சற்றே உன் விரல்களில் 
என் தலை கோதிப் பாரேன்..
தூக்கம் என்ன தூக்கம்.. 
செத்தே போவேன் !"

அதனை ஏற்று 
என் தலைபிடித்து 
அவளது மடியில் 
சாய்க்கையில் 
மறுபடி 
வந்துவிடக் கூடாது 
இந்த 'நாசமாய்ப் போன'
விழிப்பு.. 
என்பதே இப்போதைய 
எனது 
'விழிப்பு நிலையிலான'
பிரார்த்தனை.. !!


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...