Sunday, May 17, 2015

சிதறல்கள்..

சலனமில்லா மொட்டைமாடி மழைநீர்.. 
கவிழ்த்துவைத்த கண்ணாடி போன்று.. !

சற்றே வீசிய மென்காற்று நிகழ்த்திய சலனத்தில்..... 
குட்டை ஒன்று மொட்டை மாடி ஏறி வந்தது போன்று..!!

மேற்கை சில நாழிகை கிழக்காய்  பாவித்து 
அஸ்தமனத்தை அதே நாழிகையில் உதயமாய் பாவிக்கையில் 
அவசர அவசரமாய் இருள் வந்து நம் கற்பனையை விரட்டுகிறது...!

நிலவுதிக்கும் என்று கீழ்வானில் கண்கள் பதித்தது தவறாயிற்று..
இன்றைக்கு முழு அமாவாசை.. !!


1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...