Thursday, May 14, 2015

ஓய்வெடுக்கிற கவிதைகள்..

இயல்பாக என்னில் பூக்கிற கவிதைகளை மாத்திரமே காகிதங்களில் உதிர்க்கிற ஸ்பாவம் எனது.. 
ஆனால் இன்றேனோ என்னுள்ளில் பூத்திடாத கவிதைகளை இங்கே குவித்துக் காண்பிக்க எனது விரல்கள் நர்த்தனிக்கின்றன....

"ஹே விரல்களே. எதற்கிந்த துடுக்குத் தனம் உங்களுக்கு?"

"பின்னே என்னவாம்.. வெறுமே எதுவுமற்று எத்தனை நாட்கள் நீ உட்கார்ந்திருப்பாயாம்.. நாங்கள் கதைகள் கட்டுரைகள் என்று மட்டும்  பிதற்றுவதாம்.. கவிதைகளை விநியோகிக்கிற உத்தேசமே இல்லையா?"

"எதற்கு இத்தனை அவசரம்?.. வைத்துக் கொண்டா வெளியிடாமல் வஞ்சிக்கிறேன் ?.. என்னவோ சரக்குத் தீர்ந்தது போன்று ஒரு வெறுமை.. பட்டுப் போன மரம் போன்று காய்ந்து கிடக்கிறேன்.. என்னிடமிருந்து பிய்த்து எதனை "கவிதை" என்று பிரசுரிக்கப் போகிறீர்கள்?.. வறண்டு உதிரக் கிடக்கிற பட்டைகளும், சருகென சுணங்கிப் போயிருக்கிற கிளைகளும் இருக்கிற என்னிடம் பச்சை பூரிப்பில் எந்தக் கவிதை உங்களுக்குப் புலனாகிறது?"

"மறுபடி கிளர்ந்தெழ உன்னால் சாத்தியப் படும்.. எதற்கிந்த மருட்சி?.. எதற்கிந்த குற்ற உணர்ச்சி?.. பட்டமரம் பூப்பூக்கும் என்கிற வினோத வாசனையை   நிச்சயம் உனது கவிதைப் பூக்கள் பரப்பும்.. உன் கவிதைகளை எழுதிப் பழகிய எங்களுக்குத் தான் தெரியும் உன்னுடைய சாத்யக் கூறுகள்.. ஆகவே உமது 'துவளல்'  நிரந்தரமற்றது.. இப்போதைக்கு சற்றே ஓய்வெடு .. மறுபடி வரும் ஒரு புதுவசந்தம்.. அதன்பிறகு துவங்கும் எங்களின்  இலையுதிர்காலம்....!!"


2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...