Sunday, May 10, 2015

உதைபடுகிற லாஜிக் ..

திடீரென்று அன்னையர் தினம் என்று ஒரு நாள் வருகிறது.. கான்செர் நாள், டயாபட்டீஸ் நாள், கைகளை சுத்தமாக அலம்பி விட்டு சாப்பிட என்றொரு நாள்.. 
இப்படி யாரினி வரையறுத்து நாட்களை புதுப்பிக்கிறார்களோ புரியவில்லை.. ஆனால் அவர்கள் தெரிவிக்கிற இம்மாதிரியான பிரத்யேக நாட்களில் அது சம்பந்தமான வாழ்த்துக்கள் ஃபேஸ் புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் மின்னஞ்சல்களிலும் குவிந்து விடுகின்றன.. சம்பந்தப் பட்டவர்கள் வாய் மூடி மவுனிகளாக இருக்க, கொஞ்சமும் அறிமுகமற்ற அவர்களும் இவர்களும் அந்த நாட்களின் சாராம்சத்தை நம்மிடம் உதிர்த்து அதற்கான ஒரு வாழ்த்து மடலை அனுப்பி விடுகின்றனர்.. நாம் பதிலுக்கு நன்றி ஏதும் அவர்களுக்கு சொல்வதில்லை.. அவர்களும் அதனை எதிர்பார்ப்பது போன்று தெரியவில்லை.. 
Image result for MOTHERS DAY
அன்னை நம்மோடு இருக்கிற அத்தனை நாட்களும் அன்னையர் தினமே, எனிலும் அந்த அவர்கள் அனுஷ்டித்துள்ள தினம் என்னவோ அன்னைக்கான ஒரு விழா நாள் போன்ற ஓர் மாயையை ஏற்படுத்தி நம்முள் ஒரு புத்துணர்ச்சியை பாய்ச்சி விடுகிறது தான்.. 
இவ்விதமே யாதொரு நாளும்  அதனதன் வீரியத்தை  நமக்குள் உணர்த்தி சைக்காலஜிக்கலாக ஒரு ஜாலி பண்ணத்தான் பண்ணுகிறது.. 

ஒருக்கால் அம்மாவை நினைத்தே பார்த்திராதவர்கள், கூட இருந்தும் கூட அவளை ஒரு மனுஷியாக மதிக்காதவர்கள், ரகளை செய்து அவள் வைத்திருக்கிற காசு பணத்தைப் பிடுங்குகிற ஊதாரிப் பசங்கள், கொஞ்சமும் ஈவிரக்கமற்று அம்மாவை அடிக்கிற உதைக்கிற ஈனப் பிறவிகள்.. 
இவர்கள் மாதிரியான  நபர்களுக்காக இந்த மாதிரியான நாட்களைத் திணித்தனரோ என்னவோ.. 
இஸ்கூலுக்குப் போறவனுக்குத்தான் சனிக்கிழமை அரைநாள் லீவ் என்பதும் ஞாயிற்றுக்  கிழமை முழுசா லீவ் என்பதும் பரமானந்தமான விஷயம்.. 
அன்றாடம் ஞாயிறு போன்று வெட்டியாக  ஊர் சுற்றித் திரிகிற பனாதிகளுக்கு சனிஞாயிறு  எவ்வித தனிப்பட்ட அடையாளங்களைக் கொணர்ந்தும் சேர்த்து விடப் போவதில்லை..  
அதாகப் பட்டது நைனா, ரவுடிப் பசங்களை இஸ்கூலுக்குப் போறவுகன்னு வச்சுக்குவோம்.. அன்னையர் தினத்தை சனி ஞாயிறா வச்சுக்குவோம்.. 
அதேமாதிரி எப்பவுமே அம்மாவை மதிக்கிற பசங்களை, வெட்டியா ஊர் சுற்றுகிற பசங்களா வச்சுக்குவோம்.. 
ஹிஹி.. எங்கியோ பயங்கரமா "லாஜிக்" எட்டி எட்டி ஒதைக்குதல்ல?? 

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...