Sunday, October 19, 2014

அரசியல் பேசறேன்..

சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிறையிலிடப் பட்ட அன்றைய கால கட்டங்களில் அவர்களை விடுதலை செய்யச் சொல்லி இந்த அளவுக்கு போராட்டங்கள் நடத்தி இருந்தால் நமது இந்தியா இன்று மிகவும் சுபிட்சம் பெற்றிருக்கும்.. ஆனால், அப்படிப் பட்ட தியாகிகள் சிறையில் இருப்பதை பெருமையாகவும் கர்வமாகவும் நினைத்து, அந்த சம்பவங்களை வரலாறுகளாக மாற்றி இன்றைக்குப் பாட புத்தகங்களில் இடம்பெற செய்து விட மட்டுமே நம்மால் முடிந்திருக்கிறது.. ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள் சொத்துக் குவிப்பு வழக்குகளிலும் , மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளிலும், 2 G அலைவரிசை என்று அழைக்கபடுகிற தொலைபேசி சம்பந்த ஊழல் வழக்குகளிலும் சிக்கி நியாயமாக தண்டனை பெற வேண்டிய ஒரு சூழ்நிலையை சட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுத்த முற்பட்டாலும் , நாமெல்லாம் அதற்காக மிகவும் போராடி, உண்ணாவிரதம் இருந்து , கருப்பு சட்டை அணிந்து , அழுது ஆர்ப்பாட்டங்கள் செய்து , கவலை அடைந்து , தீக்குளித்து காயங்கள் அடைந்து, தற்கொலைகள் செய்து .. நமது கண்டனங்களை தெரிவித்து வருகிறோம்.. அரசியல் தலைவர்களை எல்லாம் விட மிகப் பெரிய குற்றவாளிகளாக நாம் தான் நமக்குத் தெரிகிறோம்.. இதே போக்கு தொடருமானால், இந்த மாநிலங்களை , இந்த நாட்டினை ஆள்கிற தலைவர்கள் மேற்கொண்டும் சுலபமாக சகஜமாக யதார்த்தமாக இதே போன்ற தவறுகளை தொடர்ந்து செயற்படுத்திக் கொண்டே தான் வருவார்கள்.. சுப்ரமணிசாமி போன்ற அரசியல் வாதிகள் நம் அனைவரது காழ்ப்பு உணர்ச்சிக்கும் ஆளாக நேர்கிற இந்த அநாகரிக விபத்தை நாம் சந்திக்கத் தான் வேண்டுமா?.. மகோன்னதமானவர்களைக் கொண்டாடும் குணமற்று, நம்மிடமிருந்து நமது சக்தியைப் பறித்து நமக்கே குழியைத் தோண்டும் சுயநலமிகளை ஆராதிக்கிற நமது மடமையை நாம் மட்டுமே தான் அடையாளம் கண்டு அதனைக் களைந்தெறிய வேண்டுமேயன்றி, வேறெவரும் அக்காரியத்தை செய்வதற்கு சாத்தியமில்லை.. ஜெய் ஹிந்த் ... 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...