Tuesday, January 28, 2014

கோப தருணங்கள்..

சமயங்களில்
நாசுக்கு கைவருவதில்லை
எனக்கு..
இங்கிதம் கூட
பிசகி விடுகிற
அசந்தர்ப்பங்களும்
வாய்த்து விடுகின்றன.. !

நிகழ்ந்த
பிழைகள் மனசுள்
ஓர் தாங்கொணா
சங்கடம் கொடுத்தாலும்
மேற்கொண்டு
அவ்விதம் நிகழாது
தவிர்க்க உதவுகின்றன..!!

கோபங்களில்
கத்திக் கதறுதலும்
குத்திக் குதறுதலும்
மிக நியாயங்களாகப்
புரிபட்டாலும்
பிற்பாடாக அதன்
சுவடுகள் ஒருவகைக்
கேவலத்தை விதைத்து
விட்டுப் போகின்றன..

மயிறுபிடி சண்டைகளை
சுவாரஸ்யமாக வேடிக்கை
பார்த்த பிராயங்கள் மிகக்
குதூகலமானவை..
இன்றெல்லாம் ரெண்டு பேர்
குரலை உயர்த்திப்
பேசினாலும் கூட
சமாதானப் படுத்துகிற
முஸ்தீபு தயாரில்
இருப்பது பெருமை எனிலும்...

நானே கூட
பொண்டாட்டியை
பொது இடத்தில்
கூச்சலிட்டுத் திட்டும்
அபத்தம் நேராமலில்லை ..!
அதில் தலையிடுகிற
அடுத்தவர்களைக் கூட
அடித்துதைக்கிற
அநாகரிகம் என்னுள்
மூள்வதை யாது சொல்ல??

4 comments:

  1. காலம் எல்லா மனப்பக்குவத்தை தந்து விடும்...

    ReplyDelete
  2. காலம் எல்லா மனப்பக்குவத்தை தந்து விடும்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...