Sunday, January 19, 2014

யாரையோ என்னவோ சொல்ல வர்றேன்???



எதற்கேனும்
நெகிழ்தலும்
கண்ணீர் மல்குவதும் 
பேரானந்தத்தின்
முகவரிகள் ! ...

இறுகிக் கிடப்பதும் 
ரௌத்ரம் காண்பிப்பதுமே 
சுவை எனத் 
தவறுதலாகச் 
சித்தரித்து வாழ்பவர் 
வாழ்க்கை பாலை..!!

யாதொரு சூழலையும் 
ரம்மியமாய் மாற்றும் 
திறனற்றோர் 
ஈனர்கள்.. ஊனப் பிறவிகள்.. 

களேபரம் மூள்கிற 
வாய்ப்புள்ள சூழலைக் 
கூட சுவாரஸ்யப் 
படுத்துகிற சாத்யமுள்ளவர்களே 
இப்பிரபஞ்சத்தின் 
பிரதிநிதிகள்.. 

கடவுள்களை 
தங்களின் அடையாளமாக 
தம்பட்டமடித்துக் கொள்கிற 
சில அரசியல் கட்சிகள் 
பனியனுக்குள் வீச்சரிவாளைப் 
புதைத்து வைத்திருப்பதை 
எவர் தான் அறியாமலில்லை?

ரத்தம் சொட்ட சொட்ட 
கத்தி போடுபவர்கள் கூட 
கடவுள் பக்தியின் 
தாத்பர்யம் புரிந்தவர்களே..!

வன்முறைகளுக்கான 
அடையாளமாக 
விபூதியும் குங்குமமும் 
என்றென்றும் அடையாளப் 
பட்டுவிடக் கூடாதென்பதே 
ஒவ்வொரு உண்மையான 
ஆத்திகனின் பிரார்த்தனையுமாகும்..!!

1 comment:

  1. சிலருக்கு என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...