Saturday, August 10, 2013

உலகமகா அற்பவிஷயங்கள்..

ஜினி கமல் தக்காளி வெங்காயம் எல்லாமே .ஏற்ற இறக்கங்கள் கண்டு..
ரஜினியும் கமலும் ஒரு நாள் காணாமலே போக ...  தக்காளியும் வெங்காயமும்  மக்களை இதே திணறடிப்பில் மூழ்கச் செய்யும்..!

பழனி முருகனும் திருப்பதி வேங்கடாசலபதியும் அவர்களின் பஞ்சாமிருத  லட்டுகளும் என்றென்றும் மக்கள் மனங்களில்.. .நாவுகளில்.!!

 என்றென்றைக்கும் சாஸ்வதமான சில  விஷயங்கள் ...
 தற்காலத்தில் பிரபலமாயும் செல்வாக்காயும் வாழ்கிற சிலரோடும்  சில அற்ப விஷயங்களோடும்  ஒப்பீடு செய்யப் பட்டு..
--- அவ்வித சாஸ்வத தன்மைகளோடு விளங்கி வருபவைகளே கூட இரண்டாம் பட்சமாகி விடுகிற விபரீதங்களும், ஹாஸியங்களும் எல்லா காலகட்டங்களிலும் சுலபத்தில் சாத்யமாகி விடுவது  .....  அந்த தன்மை ஓர் வார்த்தைக்கு அப்பாற்பட்டதென்றே சொல்வேன்..!!

ஆனால் மற்றொன்றையும்  இங்கே சொல்லியாக வேண்டும்..
பழநியானாலும் திருப்பதியானாலும் ஓர் அற்ப காலம் வாழ்கிற மனிதன் பார்த்து நிர்ணயித்த ஸ்தலங்கள் தாமே?.. வழிவழியாக அங்கே அலைமோதுகிற கூட்டங்கள் பிரதானமாகி அந்த ஓர் தன்மையினை  நிர்மாணித்த ஓர் மனிதன் மறுக்கவும் மறக்கவும் .படுகிறான்..

ஆக, ஓர் மனிதனைக் காட்டிலும் அவன் நிர்மாணித்த விஷயங்களே  அழியா புகழோடு  எல்லா காலங்களிலும் ஊடாடிக் கொண்டுள்ளதெனில் அது .மிகையாகா..!

அவனது சாதனைகள் வரலாறுகளில் பட்டியலிடப் படுகின்றன..
அவனது  பிறந்த மற்றும் மறைந்த நாட்கள் அடையாளப் படுத்தப் படுகின்றன.. நினைவுகூரப் படுகின்றன... கொண்டாடப் படுகின்றன..


இதொன்றும் பெரியதொரு கண்டுபிடிப்பன்று.. ஆயினும் இந்த மூலாதாரம் அனைவராலும்  சுலபமாக  மறக்கப் பெற்ற விஷயங்களே..!! இதே விதி தான் ஷாஜகான் நிர்மாணித்த தாஜ்மகாலுக்கும் பொருந்தும்... மற்றவற்றுக்கும் வைஸ் வெர்ஸா .... !

ஏதேனும் அறிவுப் பூர்வமாக சொல்லிப் பார்க்கிற முஸ்தீபில் ஏதோ கிறுக்கியதாக  உளறியதாக மனசுக்குத் தோன்றுகிறதெனிலும்.. இனி எழுதியதை எதற்காக எரேஸ் செய்யவேண்டும் என்று படுகிறது.. ஆகவே, போட்டுத்தாக்கு என்கிற ரேஞ்சில் இடுகையை இட்டாயிற்று.. இருந்து விட்டுப்  போகட்டுமே..இப்படியும் ஒரு ஸ்கிரிப்லிங்.. ஹிஹி.. 




No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...