பயில்வான்..
===============

எவர் கவிதையும்
என்னை ஏனோ
படிக்கத் தூண்டுவதே
இல்லை... ஆனால்
நான் எழுதுவதை
அனைவரும் படித்துவிட
வேண்டுமென்று
அவாவும் அவசரமும்
கொள்வதேனோ?
இந்த அநாகரீக
சுயநலம் எனக்கே
நாறுகிறது.. !
அர்த்தங்கள் பொதிந்தும்
அழகியல் ததும்பியும்
வெளியாகிற கவிதைகளை
பிறர் பெரிதாகப் பிதற்றுகையில்
வருவது பொறாமை
ஒருபுறம் என்றால்,
என்னுடையதைப் படித்துவிட்டு
ஏன் எவரும் இவ்வாறு
குதிப்பதில்லை என்கிற
அநியாய ஆதங்கம் மறுபுறம்.. !!
இளையராஜாவை
தூக்கி அந்தப் பக்கம் நிறுத்திவிட
வேண்டுமென்பது
என்னுடைய இசைவெறியின்
அகம்பாவம்..
தகரடப்பாக்களில்
டண்டணக்கா தாளங்களை
ஏற்படுத்துகிற எனக்கெதற்கு
இவ்வளவு வறட்டு நம்பிக்கைகள்
என்கிற அறிவான கேள்வி
ஆரமபத்திலேயே வரத்
தவறி விடுவதேனோ ?..
அங்ஙனமே பாரதியின்
கவிதைகள், மற்றும்
வள்ளுவனின் குரள்கள்
அடக்கம்...!
சூரியனையே அற்பமாக
அண்ணாந்து பார்த்துவிட
முடிகிற என்னை..
காய்ந்து கிடக்கிற
புற்கள் தடுக்கிவிழச்
செய்கிற சூழ்ச்சியை
நிச்சயம் நான்
வணங்க மறுக்கிற
தெய்வம் ஒன்று
தான் செய்திருக்கக் கூடும்
என்பது எமது
அசைக்க முடியாத
நம்பிக்கை.. !!!

===============

எவர் கவிதையும்
என்னை ஏனோ
படிக்கத் தூண்டுவதே
இல்லை... ஆனால்
நான் எழுதுவதை
அனைவரும் படித்துவிட
வேண்டுமென்று
அவாவும் அவசரமும்
கொள்வதேனோ?
இந்த அநாகரீக
சுயநலம் எனக்கே
நாறுகிறது.. !
அர்த்தங்கள் பொதிந்தும்
அழகியல் ததும்பியும்
வெளியாகிற கவிதைகளை
பிறர் பெரிதாகப் பிதற்றுகையில்
வருவது பொறாமை
ஒருபுறம் என்றால்,
என்னுடையதைப் படித்துவிட்டு
ஏன் எவரும் இவ்வாறு
குதிப்பதில்லை என்கிற
அநியாய ஆதங்கம் மறுபுறம்.. !!
இளையராஜாவை
தூக்கி அந்தப் பக்கம் நிறுத்திவிட
வேண்டுமென்பது
என்னுடைய இசைவெறியின்
அகம்பாவம்..
தகரடப்பாக்களில்
டண்டணக்கா தாளங்களை
ஏற்படுத்துகிற எனக்கெதற்கு
இவ்வளவு வறட்டு நம்பிக்கைகள்
என்கிற அறிவான கேள்வி
ஆரமபத்திலேயே வரத்
தவறி விடுவதேனோ ?..
அங்ஙனமே பாரதியின்
கவிதைகள், மற்றும்
வள்ளுவனின் குரள்கள்
அடக்கம்...!
சூரியனையே அற்பமாக
அண்ணாந்து பார்த்துவிட
முடிகிற என்னை..
காய்ந்து கிடக்கிற
புற்கள் தடுக்கிவிழச்
செய்கிற சூழ்ச்சியை
நிச்சயம் நான்
வணங்க மறுக்கிற
தெய்வம் ஒன்று
தான் செய்திருக்கக் கூடும்
என்பது எமது
அசைக்க முடியாத
நம்பிக்கை.. !!!
