எல்லா பலவீனங்களோடும்
கை குலுக்க வேண்டிய
நிர்ப்பந்தம்..
"நான் பலவான்களின்
உற்ற சிநேகிதன்...உங்கள்
கைகளைக் குலுக்குவதே
எனக்குத் தேவையில்லாத வேலை.."
என்று பலவீனங்களிடம்
சொல்ல நினைக்கிறேன்...
"நீ நினைப்பதையே நாங்கள்
புரிந்து கொள்வோம் "
என்கிற தோரணையில்
என்னில் ஊடுருவி
என்னை ஆக்கிரமிக்கின்றன
பலவீனங்கள்...
என் பலங்களையும் தைரியங்களையும்
உடனடியாக காலி செய்யச்சொல்லி
நாலாந்தரமாக நடக்கின்றன....
"கவலைப்படாதே ராசா...
இப்போதைக்கு நாங்க போறோம்..
கண்டிப்பா இந்த பலவீன சனியன்கள்
தொலையும்.. அப்ப திரும்ப வருவோம்"
--இப்படி என்னை
இருக்க வைத்துவிட்டுப்
போயிருக்கின்றன பலங்களும்
தைரியங்களும்..
சுலபத்தில் எல்லா
நல்லவைகளும் காத்திருக்க
சொல்லி விட்டு அதோகதியாக
நிறுத்தி விட்டுப் போய் விடுகின்றன..
மறுபடி பலங்களையும் தைரியங்களையும்
களவாடுகிற
திறன்களை பயங்களிடமும்
கவலைகளிடமும் இருந்தே
கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது....!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Monday, December 20, 2010
Subscribe to:
Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பா ப்பாவின் குறும்பு எனக்கும் மனைவிக்கும் ரத்தக் கொதிப்பேற்றும்.. முதுகில்அறைந்து விடுவதும் கால்களுக்குக் கீழே நறுக்கென்று கிள்ளி வி...