Wednesday, July 27, 2016

அகாலம்



இழவு வீட்டில்
அழும் பெண்களில் 
அழகி தேடும்
சபலக் கண்கள் ..

இறந்தவரின்
உறவுப் பெண் வந்து
கட்டித் தழுவி
அழ நேர்கையில்
மார்புச் சூட்டில்
மயங்கிடும் கயமை..

செத்தவன் அறிவான்
சேற்றுப் பன்றி
இவன் என்று...
எழுந்தா வரப் போகிறான்
எமனோடு ஓடிப் போனவன்?

நேற்றுக் கூட
புத்திமதி சொன்னானவன்.
"மற்றோரின் பெண்டிரில் விழுந்தால்
நீ நாறி.. உன் தாய் மனைவி மகள் நாறி.."
-- சொன்ன உத்தமன்
எல்லாரையும் நாறவிட்டுப்
போயே விட்டான்..

இப்படித்தான் சமயங்களில்
உன்னதமானவர்கள்
அகாலமாகத் தொலைவதும்
ஊதாரிகள் அகாலமாக
வாழ்வதும் ..
இப்பிரபஞ்சத்தின் 
சுலப நிகழ்வாகி விடுகிறது.. !!?

Sunday, July 24, 2016

கபாலி.............. சினிமா விமரிசனம்

Image result for kabali modern arts

"மகிழ்ச்சி".... படம் நெடுக இது இல்லை எனிலும், அவ்வப்போது ரஜினியால் தூவப்படுகிற அனாவசிய ஒற்றை வார்த்தை.. 

புதிதாக அகராதியில் சேர்க்கப் பெற்ற வார்த்தை போன்று மக்களுள் இப்போது தான் இந்த வார்த்தை உதடுகளில் குடி புகுந்துள்ளது... 

அனுபவங்களாக இருந்த கட்டங்களில் கூட உச்சரிக்கப் படாத இந்த வார்த்தை, மிகப் பெரும் அவ்ஸதையில் சிக்கிக் கொண்ட பிற்பாடு உதட்டளவில் பிதற்ற வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது கபாலி.. 

மனைவி தேடி கண்டங்கள் கடக்க நேர்வதைப் பார்க்கையில் இது ரஜினி படமா ரஜினியின் மனைவி படமா என்கிற சந்தேகம் எழுகிறது..


சினிமா உலகம் பாலை வெளியாயிருந்த கால கட்டங்களில் தமது வருகையால் 'பாலைவன சோலை' யாக மாற்றிய ஒரு மனிதன்..
இன்று.. டெக்நிக்கல் விஷயங்களில் அபரிமிதம் நிரம்பி பருத்துத் தழைத்துக் கிடக்கிற சினிமாவை எதற்காக கபாலி வந்து இப்படி ஒரு பாலைவனமாக்க வேண்டும்?

பைனான்சு நடத்தி ஏமாற்றுகிறவன் கூட ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை சார்ந்த மக்களை மட்டுமே ஏமாற்ற முடியும்.. ஆனால், இந்தக் கபாலி உலகத்தையே.. மொத்த உலக மக்களையே மட சாம்பிராணி ஆக்கி விட்டதே.. !

குழந்தைக்கு ஹார்லிக்ஸ் பூஸ்ட் வாங்குவதையே பல மாதங்கள் ஒத்திப் போட்டுவிட்டு வரக்காப்பி கொடுத்துப் பழக்குகிற நடுத்தர மக்களும், அதற்கும் கீழானவர்களுமே கூட ஐந்நூறு ஆயிரம் என்று கப்பம் கட்டி சுண்ணாம்பானதை எப்படி சொல்ல?

அதென்ன ரஜினி மகள்?.. அதென்ன துப்பாக்கி சூடு? . அதென்ன குருதிப் புனல்?.. அதென்ன அலறல்கள் .. அவலங்கள்??
பாஷாவில் தான் ஆசை தீர டானாக நடித்துத் தீர்ந்தாயிற்றே .. பிற்பாடும் அதுவும் இத்தனை இடைவெளிக்குப் பிற்பாடு எதற்காக அதே கருமாந்திரம்?..

இந்த அற்ப கருவில் அப்படி என்ன பெரிய சுவாரஸ்யம்?.. இத்தனை உடல் பலவீனத்தில் அப்படி என்ன முறுக்கு.. அப்படி என்ன அகந்தை.. அப்படி என்ன பந்தோபஸ்து?..

நானெல்லாம் பில்லாவை ஒரே நாளில் 2 முறை பார்த்துக் குதூகலித்தவன்.. ஆனால் கபாலியை கால்வாசிப் பார்க்கையிலேயே தெறித்தோடி வந்து விடத் தோன்றி விட்டதே.. !!

Monday, July 11, 2016

மணக்கிற நாற்றங்கள் ..

ழிவேறும் பிராந்தியங்கள் மீதாக  
பிரத்யேக காம உணர்வினை 
செருகி இருக்கிற 
படைத்தவனின் கூற்று 
விவரிக்கிற வார்த்தைகளை 
தொலைத்தவை.. 

திரேகம் எங்கிலும் 
வியர்வை நாளங்கள் 
பீய்ச்சி அடித்த ஈரம்.. 
அதனை அசிங்க அடையாளமாக 
காண்பிக்கிற நமது உடைகள்.. 
அதற்கொரு பிரத்யேக துர்நாற்றம்.. 

பரஸ்பரம் 
மனிதக் கழிவுகள் மட்டுமே 
இன்னொரு மனிதனை 
அசூயை கொள்ள செய்கிறது.. 

ஒரு காகத்தின் எச்சம் 
ஏற்படுத்தாத அருவருப்புணர்வு 
காலில் மலம் மிதி படுகையில் 
நிகழ்ந்து விடுகிறது.. !

சிகப்புக் குருதி உள்ளோடும் 
பச்சை நரம்புகள்..
புடைத்து சீழ் கோர்த்து நிற்கிற 
மருந்திட  மறந்த காயங்கள்....

இன்னும் அடுக்கிப் பட்டியலிட 
ஏராள நாற்றங்கள் உண்டு மனிதனிடத்து.. 

ஆனால் விளக்கணைந்த 
இருண்ட  அறைகளில் 
நுகர்கிற பிரக்ஞையை அறவே இழந்து 
அனைத்தும் மணக்கிறதென்று 
தம் கற்பனைகளுக்கு 
அரிதாரம் பூசிக் கொள்கிறான் ..!!

Wednesday, July 6, 2016

ஸ்வாதிகளும் ராம்குமார்களும்..


Image result for blood stainImage result for blood stain
மூக வலைதளம் என்பது கத்தி போல.. 
சாதுர்யமாக நடையிட சாத்திய ப் படவில்லை எனில், நம்மைக் காய படுத்துவது மட்டுமன்று ... ரெண்டு துண்டாக்கிக் காணாமற் செய்து விடும்.. !
சாட்டிங்கில் ஒரு நபருடைய அந்த சாட் செய்கிற மொழி, அவர் பேசுகிற வாய்வழி மொழி, இவை போக நேரில் பார்க்கையில் அவரது உடல் மொழி யாவற்றையும் கிரகிக்கிற ஆற்றல் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியம்.. 

பொதுவாகவே உணர்ச்சிவசப் படுதல் என்பது ஆண் இனத்தின் பொது இயல்பு.. அது ஆறறிவிலும் சரி, ஐந்தறிவிலும் சரி.. 
எந்தப் பெட்டை நாய்களும் ஆண் நாயைப் புணர்வதற்கான முஸ்த்தீபை 
மேற்கொள்வதில்லை...! பெண்மயில்களை மயக்கத் தான் ஆண் மயில்கள் தோகை விரித்தாடுகின்றன.. 

ஆனால் சமீப காலமாக மனித இனத்தில் மாத்திரம் பெண்கள் ஆண்களிடத்தே தோகை விரித்தாடுகிற விபரீதங்கள் எங்கெங்கிலும் நிகழ்ந்தேறுவதாக அனுமானிக்க முடிகிறது.. 

பார்க்குகள் என்பன திறந்தவெளி விபச்சார விடுதிகள் போன்றே எல்லா ஊர்களிலும் புரிபடுகின்றன. காதல்களும் கள்ள க் காதல்களும் களேபரப் படுகின்றன அந்த சிமெண்ட் பெஞ்சுகளில்.. !!

தரமில்லாத ஒருவன் தனது காதலை வெளியிடும் பட்சத்தில் அதனை நாசுக்காகக் கையாள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அது சம்பந்தப் பட்ட எல்லா பெண்களுக்குமே உண்டு.... தமது ஆட்சேபத்தினை அநாகரீகப் படுத்தாமல் அவனுக்குத் தகுந்த வகையிலே ஒரு பதிலை சொல்லி .. திரும்ப அவனே அவளிடம் மன்னிப்புக் கேட்கிற வகையிலே ஒரு சூழலை உருவாக்க வேண்டிய மாண்பு அவளிடம் தேவைப் படுகிறது.. 
அவ்விதம் இல்லாமல் , அவனது காதலை காய ப் படுத்துகிற விதமாக தமது அகந்தையை ரௌத்திரத்தை ஈகோவை ஒன்றிழைத்து மனரீதியாக குத்திக் குதறி விடுவது மகா முட்டாள் தனமாகும்.. 

அப்படி ஒரு தவறைத் தான் ஸ்வாதி செய்து விட்டார் என்று நமக்கெல்லாம் தோன்றுகிறது.. 

சவால் விடுவதும் காறி மூஞ்சியில் உமிழ்வதும் சினிமாவில் சிறப்பாகத் தெரியலாம்.. நிஜத்தில் அது வேறு விபரீத விளைவுகளை நிகழ்த்த ஏதுவாகி விட்டதென்கிற யதார்த்தம் தான் அந்த நுங்கம்பாக்கம் கொலை.. 

ஒரு ஐ.டி யில் வொர்க் செய்கிற பெண்ணை எந்த மீடியாக்கள் இப்படி நடக்கத் தூண்டியது என்கிற கேள்வி நம் மனங்களில் எழுகையில், நிச்சயம் முதலிடம் பிடிப்பது இந்தத் தொலைக்காட்சி நாடகங்கள் தான்.. 
அதில் இடம் பெறுகிற பெண்ணாதிக்க வீரிய வசனங்களும் , அநியாய அதிகப் பிரசங்கங்களுமே நிஜப் பெண்களையும் கேனத் தனமாக நடக்கச் செய்கிறது என்று ஒரு அடிமுட்டாள் கூட ஒரு முடிவுக்கு வந்துவிட முடிகிறது.. !!

நாசூக்கான யதார்த்தங்கள் பிடிபடாத வரையிலுமாக, இப்படியான ஸ்வாதிகளும் ராம்குமார்களும் எங்கெங்கிலும் இன்னும் பொங்கிப் பெருகுவர் என்றே ஒரு தீர்மானத்திற்கு வரமுடிகிறது....!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...