Saturday, February 20, 2010

நாத்திகன் உளறல்கள்....

கழுத்தில் சுற்றி
சிவனை அழகு
படுத்துகிற பாம்பு
நம்மை ஏன் கொத்திக்
கொல்ல மட்டுமே
வருகிறது?...

முருகனை மட்டுமே
ஏற்றி உலகம் சுற்றுகிற
மயில் .. நாம் வெள்ளாமை
செய்திருக்கிற நெற்பயிர்களை
வந்து ஓயாமல் சேதம் செய்வது ஏன்?

விநாயகர் முன்னிலையில்
லட்டைக் கையில் ஏந்தி
மிகவும் பவ்யமாகக்
காட்சி தருகிற சுண்டெலி
நம் வீட்டுத் தலையணை
போர்வைகளை ரணகளம்
செய்து நம் தூக்கங்களை
அல்லவா துவம்சம்
செய்கின்றன?...!!

யதார்த்த வாழ்விலே
மனிதனுக்கு அவஸ்தை
கொடுக்கிற யாவற்றையும்
தெய்வத்தின் முன்னிலையில்
சாதுவாக நிறுத்துகிற
அவனுடைய கற்பனாரசனை
கவித்துவம் நிரம்பியதே..
--கடவுளையே
அற்புதமாக கற்பனை
செய்கிற மனிதன்
அல்ப மிருகத்தை
செய்ய சிரமப்படுவானா என்ன?

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...